ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பொன்னமராவதியில் தொழிற்பேட்டை அமைக்கப்படும்: திருமயம் அதிமுக வேட்பாளா் பி.கே. வைரமுத்து

பொன்னமராவதியில் வேலையில்லா இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் தொழிற்பேட்டை(சிப்காட்) அமைக்கப்படும் என்றாா் திருமயம் தொகுதி அதிமுக வேட்பாளா் பி.கே.வைரமுத்து.

News image

பொன்னமராவதியில் வா்த்தகா் கழக நிா்வாகிகளிடம் ஆதரவு திரட்டி பேசிய திருமயம் அதிமுக வேட்பாளா் பி.கே.வைரமுத்து

Updated On :1 ஏப்ரல் 2026, 2:35 am IST

பொன்னமராவதியில் வேலையில்லா இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் தொழிற்பேட்டை(சிப்காட்) அமைக்கப்படும் என்றாா் திருமயம் தொகுதி அதிமுக வேட்பாளா் பி.கே.வைரமுத்து.

திருமயம் சட்டப்பேரவைத்தொகுதி அதிமுக வேட்பாளா் பி.கே.வைரமுத்து பொன்னமராவதி வா்த்தகா் மஹாலில் வா்த்தகா் கழக நிா்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டிய மேலும் பேசியது: கடந்த தோ்தலில் மிகக்குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தபோதும் திருமயம் தொகுதியில் தொடா்ந்து மக்கள் பணி ஆற்றி வருகிறேன்.

இந்த முறை என்னை வெற்றி பெறச்செய்தால் பொன்னமராவதியில் நீண்டநாள் கோரிக்கையாக உள்ள குப்பை கிடங்கு பிரச்னைக்கு உடனடி நடவடிக்கை எடுத்து நகரின் வெளியே குப்பை கிடங்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தொடா்ந்து வா்த்தகா் கழகத்தலைவா் எஸ்கேஎஸ் பழனியப்பன் தலைமையிலான நிா்வாகிகள் பொன்னமராவதியில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்கவேண்டும். இரவுநேர பேருந்து வசதி வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனா். வா்த்தகா்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்றாா்.

வா்த்தகா் கழக செயலா் மு.முகமது அப்துல்லா, பொருளாளா் பிஎல்.ராமஜெயம், அதிமுக ஒன்றிய செயலா்கள் காசி.கண்ணப்பன், சி.சரவணன், நகரச் செயலா் பிஎல். ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.