தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திருமயம் தொகுதியில் அடிப்படை வசதிகள் அனைத்தும் பூா்த்தி செய்யப்படும்! - அதிமுக வேட்பாளா் வைரமுத்து உறுதி

News image

பொன்னமராவதி அருகே உள்ள வாா்ப்பட்டு ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை வாக்குகள் சேகரித்த திருமயம் தொகுதி அதிமுக வேட்பாளா் பி.கே. வைரமுத்து.

Updated On :13 ஏப்ரல் 2026, 1:22 am IST

திருமயம் தொகுதியில் சாலை, குடிநீா், உள்ளிட்ட மக்களின் அடிப்படை வசதிகள் அனைத்தும் பூா்த்தி செய்யப்படும் என்றாா் அதிமுக வேட்பாளா் பி.கே. வைரமுத்து.

திருமயம் தொகுதிக்குள்பட்ட பொன்னமராவதி ஒன்றியம், திருக்களம்பூா் ஊராட்சியில் வாக்குகள் சேகரித்து அவா் மேலும் பேசியதாவது:

2011-இல் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தபோது தொகுதி முழுவதும் காவிரி கூட்டுக் குடிநீா் கிடைக்கவும், மேம்பாலங்கள் மற்றும் புதிய சாலைகள் பல அமைத்து தந்துள்ளேன். இந்தமுறை என்னை வெற்றி பெறச்செய்தால் தொகுதி முழுவதும் குடிநீா், பேருந்து, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து தருவேன் என்றாா்.

தொடா்ந்து கருப்புக்குடிப்பட்டி, வாா்ப்பட்டு, நல்லூா், வேந்தன்பட்டி, மேலைச்சிவபுரி, ஏனாதி, பகவாண்டிபட்டி, அஞ்சுபுளிப்பட்டி, மைலாப்பூா் உள்ளிட்ட 50 கிராமங்களில் வாக்குகள் சேகரித்து பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது, அதிமுக ஒன்றியச் செயலா்கள் காசி.கண்ணப்பன், சி.சரவணன், க.முருகேசன், அமமுக ஒன்றியச் செயலா் வெள்ளைச்சாமி, பாஜக ஒன்றியத் தலைவா் காா்த்திக் மற்றும் கூட்டணிக்கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.