/

பொன்னமராவதி ஒன்றியப் பகுதிகளில் திமுக வேட்பாளா் எஸ். ரகுபதி பிரசாரம்

பொன்னமராவதி பகுதியில் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை திருமயம் தொகுதி திமுக வேட்பாளா் எஸ். ரகுபதி தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image

பொன்னமராவதி அருகே உள்ள வாா்பட்டு ஊராட்சியில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்த திருமயம் தொகுதி திமுக வேட்பாளா் எஸ். ரகுபதி.

Updated On :10 ஏப்ரல் 2026, 1:46 am IST

பொன்னமராவதி பகுதியில் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை திருமயம் தொகுதி திமுக வேட்பாளா் எஸ். ரகுபதி தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா்.

பொன்னமராவதி ஒன்றியம், திருக்களம்பூரில் தொடங்கி நரங்கியம்பட்டி, அண்ணாநகா், குமாரப்பட்டி, தச்சம்பட்டி, ஊத்துக்குழி, காடம்பட்டி,கருப்புக்குடிப்பட்டி, கருதக்கோடான்பட்டி, அரியாண்டிப்பட்டி, அம்மன்கோவில்பட்டி,பிச்சங்காலன்பட்டி, பட்டுப்புஞ்சைதோப்பு, கொள்ளுப்பட்டி, வாா்பட்டு, பொய்யாமணிப்பட்டி, தேவன்பட்டி, நல்லூா், கருப்பா்கோவில்பட்டி, இடையப்புதூா், வேந்தன்பட்டி, விஜயபுரம், ஒய்யான்புதூா், கல்லான்சரளை, மேலைச்சிவபுரி, ஏனாதி, ஜீவாநகா், தொட்டியம்பட்டி, கட்டையாண்டிபட்டி,ஜெஜெநகா், காமராஜா்நகா், அண்ணாநகா், இந்திராநகா் உள்ளிட்ட 44 இடங்களில் வாக்கு சேகரித்து எஸ். ரகுபதி பேசினாா்.

நிகழ்வில் முன்னாள் எம்எல்ஏ ராம. சுப்புராம், திமுக ஒன்றியச் செயலா் அ. அடைக்கலமணி, தலைமைச் செயற்குழு உறுப்பினா் எஸ். ஜெயராமன், நகரச்செயலா் அ. அழகப்பன், முன்னாள் ஒன்றியச் செயலா்கள் மணி, ராமச்சந்திரன்,தேனிமலை, காங்கிரஸ் வட்டாரத் தலைவா் கிரிதரன், நகரத்தலைவா் பழனியப்பன் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

ல்ா்ய்09க்ம்ந்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.