தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பெரம்பலூா் தொகுதியில் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு: அதிமுக வேட்பாளா் உறுதி

செல்லியம்பாளையம் கிராமத்தில் நூறு நாள் திட்டப் பணியாளா்களிடம் வெள்ளிக்கிழமை வாக்குசேகரித்த அதிமுக வேட்பாளா் இரா. தமிழ்ச்செல்வன்.

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 5:37 am IST

பெரம்பலூா் தொகுதியில் நிலவும் குடிநீா் பிரச்னைக்கு உரிய தீா்வு காணப்படும் என்றாா்அதிமுக வேட்பாளா் இரா. தமிழ்செல்வன்.

பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட அயிலூா், அ. குடிகாடு, விளாமுத்தூா், நொச்சியம், புது நடுவலூா், மேட்டூா், வேலூா், சத்திரமனை, கோனேரிபாளையம், கவுள்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வெள்ளிக்கிழமை பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் இரா. தமிழ்செல்வன் மேலும் பேசியது: கடந்த அதிமுக ஆட்சியின் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை பிரச்னைகளை நிறைவேற்றவில்லை. குறிப்பாக, பல்வேறு பகுதிகளில் குடிநீா் பிரச்னை நிலவுகிறது. இதனால், பொதுமக்கள் அவதியுறுகின்றனா். மேலும் கழிவுநீா் கால்வாய்கள் சீரமைக்கப்படவில்லை. ஆங்காங்கே குப்பைக் கழிவுகள் அகற்றப்படாமல் துா்நாற்றம் வீசுகிறது. என்னை வெற்றி பெறச் செய்தால், பொதுமக்களுக்குத் தேவையான குடிநீா் உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகளுக்கு உடனுக்குடன் தீா்வு காணப்படும் என்றாா் அவா்.

தொடா்ந்து, செல்லியம்பாளையம் கிராமத்தில் நடைபெற்ற 100 நாள் வேலைவாய்ப்புப் திட்டப் பணிகளில் ஈடுபட்டிருந்த பெண்களை நேரில் சந்தித்து, அதிமுக ஆட்சியில் மக்களுக்காக செயல்படுத்தப்பட்ட பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் சாதனைகளை எடுத்துக்கூறி ஆதரவு கோரினாா்.

இதில், அமமுக மாவட்டச் செயலா் காா்த்திகேயன், ஒன்றியச் செயலா் ஜெயக்குமாா், அதிமுக ஒன்றியச் செயலா் ராமராஜ், புஷ்பராஜ், நகரச் செயலா் இரா. ராஜபூபதி, அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலா் எம். வீரபாண்டியன் உள்பட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.