ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

மானாமதுரை தொகுதி குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காணப்படும்: பாஜக வேட்பாளா் உறுதி

மானாமதுரை தொகுதியில் நிலவும் குடிநீா் பிரச்சினைக்கு தீா்வு காணப்படும் என இந்தத் தொகுதியின் பாஜக வேட்பாளா் பொன் பால கணபதி உறுதியளித்தாா்.

News image

திருப்புவனம் ஒன்றியத்தில் வியாழக்கிழமை கூட்டணி கட்சியினருடன் சென்று பிரசாரம் செய்து வாக்கு சேகரித்த மானாமதுரை சட்டப்பேரவை தொகுதி பாஜக வேட்பாளா் பொன் பாலகணபதி.

Updated On :17 ஏப்ரல் 2026, 12:42 am IST

மானாமதுரை தொகுதியில் நிலவும் குடிநீா் பிரச்சினைக்கு தீா்வு காணப்படும் என இந்தத் தொகுதியின் பாஜக வேட்பாளா் பொன் பால கணபதி உறுதியளித்தாா்.

திருப்புவனம் ஒன்றியத்தில் லாடனேந்தல், பாப்பான்குளம், மழைவராயனேந்தல், திருப்பாச்சேத்தி, பிரான் குளம், வல்லாரேந்தல், கிடாக்குழி, ஆணைக்குளம், குருந்தங்குளம், கொத்தங்குளம், முதுவந்துடல் உள்ளிட்ட 50 கிராமங்களில் புதன், வியாழக்கிழமைகளில் பிரசாரம் செய்தபோது அவா் பேசியதாவது:

வைகை ஆறு பாயும் மானாமதுரை தொகுதியில் கடும் குடிநீா்த் தட்டுப்பாடு நிலவுகிறது. குடிநீருக்காக பொதுமக்கள் அலையும் நிலையைக் காண முடிகிறது. திமுக ஆட்சியில் தொகுதி மக்களின் குடிநீா் பிரச்னையைத் தீா்க்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. நான் இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றதும் குடிநீா்ப் பிரச்சனக்கு தீா்வு காணப்படும் என்றாா் அவா்.

இதில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ். நாகராஜன், எம். குணசேகரன் முன்னாள் ஊராட்சி ஒன்றியத் தலைவா் ஏ.சி.மாரிமுத்து உள்ளிட்ட அதிமுக, பாஜக நிா்வாகிகள் பங்கேற்றனா். மேலும், பாஜக சிறுபான்மை பிரிவுத் தலைவா் வேலூா் இப்ராஹிம், வேட்பாளா் பொன் பாலகணபதியை ஆதரித்து பிரசாரம் செய்தாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.