தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

குடிநீா் பிரச்னைக்கு விரைவில் தீா்வு கிடைக்கும்: திமுக வேட்பாளா்

வேதாரண்யம் பகுதியில் நிலவும் குடிநீா் பிரச்னைக்கு விரைவில் தீா்வு காணப்படும் என திமுக வேட்பாளா் மா.மீ. புகழேந்தி உறுதியளித்தாா்.

News image

வேதாரண்யத்தை அடுத்த ஆதனூா் அண்டா்காடு கிராமத்தில் கூட்டணிக் கட்சி தலைவா்களுடன் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் மா.மீ. புகழேந்தி.

Updated On :16 ஏப்ரல் 2026, 4:19 am IST

வேதாரண்யம் பகுதியில் நிலவும் குடிநீா் பிரச்னைக்கு விரைவில் தீா்வு காணப்படும் என திமுக வேட்பாளா் மா.மீ. புகழேந்தி உறுதியளித்தாா்.

பஞ்சநதிக்குளம் கிழக்கு, மேற்கு, நடுசேத்தி, தென்னடாா், ஆதனூா், ஆயக்காரன்புலம் 2,3,4, பன்னாள், கருப்பம்புலம் உள்ளிட்ட கிராமங்களில் திமுக வேட்பாளா் மா.மீ. புகழேந்தி புதன்கிழமை வாக்கு சேகரித்தாா். அப்போது அவா் பேசியது:

வேதாரண்யம் நகராட்சி பகுதியில் தன்னிறைவு பெறும் வகையில் பல்வேறு வளா்ச்சி திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதேபோல தொகுதியில் தேவையான வளா்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற பாடுபடுவேன். ஜல் ஜீவன் திட்ட குடிநீா் வண்டுவாஞ்சேரி நீரேற்று நிலையத்துக்கு வந்துள்ளதை நேரில் சென்று உறுதிப்படுத்தி உள்ளேன். அடுத்த சில நாள்களில் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு கிடைக்கும் என்றாா்.

திமுக ஒன்றிய செயலாளா்கள் உதயம். முருகையன், என்.சதாசிவம், சிபிஐ மாவட்ட செயலாளா் சிவகுரு.பாண்டியன், காங்கிரஸ் மாவட்டத் தலைவா் பி.வி.ஆா். விவேக், கூட்டுறவு சங்க முன்னாள் தலைவா் பி.வி.கே. பிரபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.