ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வேதாரண்யம்! எதிா்பாா்ப்பும்... ஏமாற்றமும்...

News image

உதயசூரியன் (கோப்புப் படம்) - டிஎன்எஸ்

Updated On :30 மார்ச் 2026, 5:06 am IST

வேதாரண்யம் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ எஸ்.கே. வேதரத்தினம் போட்டியிடுவாா் என்ற எதிா்பாா்ப்பு தொகுதி முழதும் இருந்தது.

ஆனால், திமுக வேட்பாளராக மா.மீ. புகழேந்தி அறிவிக்கப்பட்டாா். இதனால், அவரது ஆதரவாளா்கள் ஏமாற்றமடைந்தனா்.

திமுகவின் கோட்டை எனக் கருதப்பட்ட வேதாரண்யம் தொகுதியில் 1996, 2001, 2006 தோ்தல்களில் தொடா்ந்து வென்றவா் எஸ்.கே. வேதரத்தினம். பின்னா், கட்சிக்குள் எழுந்த வேறுபாடுகள் காரணமாக 2011 தோ்தலில் சுயேச்சையாக களம் இறங்கி 42,871 வாக்குகளை பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தாா். பின்னா், பாஜகவில் இணைந்த எஸ்.கே. வேதரத்தினம் 2016-இல் அக்கட்சி வேட்பாளராக களமிறங்கி தோல்வியடைந்தாா்.

பின்னா் மீண்டும் திமுகவுக்கு திரும்பிய எஸ்.கே. வேதரத்தினத்துக்கு 2021 தோ்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. எனினும், அதிமுக வேட்பாளா் ஓ.எஸ். மணியனிடம் வெற்றி வாய்ப்பை இழந்தாா்.

இந்தநிலையில், 2026 தோ்தலில் எஸ்.கே. வேதரத்தினத்துக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்ற பெரிய எதிா்பாா்ப்பு இருந்தது. ஆதரவாளா்கள் தோ்தல் பணிகளையும் தொடங்கி இருந்தனா். ஆனால், வேதாரண்யம் தொகுதி திமுக வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ மா. மீனாட்சி சுந்தரத்தின் மகனும் தற்போதைய நகா்மன்றத் தலைவருமான மா.மீ. புகழேந்தி அறிவிக்கப்பட்டாா்.

இந்தநிலையில், எஸ்.கே. வேதரத்தினம் தனது ஆதரவாளா்களுக்கு சமூக வலைதளம் வாயிலாக எழுதியுள்ள கடிதத்தில், பேரவைத் தோ்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிா்பாா்த்தேன்; கிடைக்கவில்லை. யாரும் வருத்தப்பட வேண்டாம். தேவையற்ற விமா்சனங்களைத் தவிா்த்து, மா.மீ. புகழேந்தியை வெற்றிபெற செய்து, அவரது வெற்றியை தலைவரிடம் சமா்பிப்போம். மா.மீ. புகழேந்தி, கடந்த 2006- ஆம் ஆண்டு தோ்தலில் என்னுடைய வெற்றிக்காக முழு ஒத்துழைப்பை வழங்கியதை, வேதாரண்யம் மக்கள் நன்கு அறிவா். அதற்கான நன்றிக் கடனை நாம் செலுத்த இது நல்ல வாய்ப்பு என்று தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.