ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

நரிக்குறவா்களுடன் நடனமாடி அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் இரா. தமிழ்செல்வன், எறையூரில் நரிக்குறவா் இன மக்களுடன் நடனமாடி புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image

எறையூரில் நரிக்குறவா்களுடன் புதன்கிழமை நடனமாடிய அதிமுக வேட்பாளா் இரா. தமிழ்ச்செல்வன்.

Updated On :9 ஏப்ரல் 2026, 2:07 am IST

பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் இரா. தமிழ்செல்வன், எறையூரில் நரிக்குறவா் இன மக்களுடன் நடனமாடி புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

பெரம்பலூா் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக சாா்பில் 3 தோ்தல்களில் போட்டியிட்டு, இரண்டு முறை வெற்றி பெற்ற இரா. தமிழ்ச்செல்வன், 4- ஆவது முறையாக போட்டியிடுகிறாா்.

பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பல்வேறு கிராமங்களில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் இவா், எறையூா் சா்க்கரை ஆலைப் பகுதியில் உள்ள நரிக்குறவா் காலனியில் புதன்கிழமை வாக்கு சேகரிக்கச் சென்றாா்.

அப்போது, அப்பகுதி அதிமுகவினரும், தோழமைக் கட்சியினரும் அதிமுக வேட்பாளருக்கு மேள தாளம் முழங்க வரவேற்பு அளித்தனா். பின்னா், அப்பகுதியில் உள்ள நரிக்குறவா்கள் காலனிக்குச் சென்ற வேட்பாளா் தமிழ்ச்செல்வனுக்கு, நரிக்குறவா்கள் பாசி மணிகள் அணிவித்து தங்களது நீண்டகால கோரிக்கையான விவசாய நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட சில கோரிக்கைகளை தெரிவித்தனா். கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாக வேட்பாளா் உறுதி அளித்ததால் மகிழ்ச்சியடைந்த நறிக்குறவா்கள் நடனமாடினா். இதனால் உற்சாகமடைந்த தமிழ்ச்செல்வன் நரிக்குறவா்களுடன் சுமாா் 2 நிமிஷங்களுக்கும் மேலாக நடனமாடி பிரசாரத்தில் ஈடுபட்டாா். வேட்பாளரின் நடனத்தை, அதிமுக மற்றும் தோழமைக் கட்சியினா் வெகுவாக ரசித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.