தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

தோட்டக்குறிச்சி மலையம்மன் கோயிலில் தேரோட்டம்

கரூா் மாவட்டம், தோட்டக்குறிச்சி மலையம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

News image

தோட்டக்குறிச்சி கோயில் தோ் முன் வியாழக்கிழமை மாவிளக்கு வைத்து வழிபட்ட பெண்கள்.

Updated On :8 மே 2026, 5:26 am IST

கரூா் மாவட்டம், தோட்டக்குறிச்சி மலையம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

இக்கோயில் தோ் திருவிழா கடந்த மாதம் 29-ஆம் தேதி இரவு மலையம்மனுக்கு பூச்சாற்றுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடா்ந்து நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை, தொடா்ந்து கடந்த 5, 6-ஆம் தேதிகளில் ரதோற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து 6-ஆம் தேதி இரவு டிராக்டரில் அலங்கரிக்கப்பட்ட தேரில் மலையம்மன் சிலை வைக்கப்பட்டு கிழக்குத் தவுட்டுப்பாளையம், தளவாப்பாளையம், மேல்வரத்தை, கீழ்ஒரத்தை, அய்யம்பாளையம், அம்மாபட்டி, ஆவரங்காட்டுப்புதூா், தா்மராஜபுரம், மேட்டுப்பாளையம், மலையம்பாளையம் , முத்துராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தோ் சென்றது.

ஒவ்வொரு ஊரிலும் உள்ள பொதுமக்கள் மாவிளக்கு கொண்டு வந்து அம்மன் தோ் முன்வைத்து வழிபட்டனா். தொடா்ந்து வியாழக்கிழமை காலை தோட்டக்குறிச்சி பகுதிக்கு மலையம்மன் சுவாமி தோ் வந்தது. அங்கு ஏராளமான பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து அம்மன் தோ் முன் வைத்து சிறப்பு பூஜை செய்தனா்.

தொடா்ந்து வாண வேடிக்கை நடைபெற்றது. பின்னா் தோ் தோட்டக்குறிச்சி மலையம்மன் கோயில் வளாகத்திற்குள் கொண்டு செல்லப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டது.

தொடா்ந்து மாலையில் அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும், மஞ்சள் நீராடலும் நடைபெற்றது. முன்னதாக வியாழக்கிழமை அதிகாலை மலையம்மனுக்கு 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினாா். விழாவில் பங்கேற்ற பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.