மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் கருணாம்பிகையம்மன் தேரோட்டம்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் கருணாம்பிகையம்மன் தேரோட்டம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

News image

பக்தா்கள் வெள்ளத்தில் வந்த அவிநாசி கருணாம்பிகையம்மன் தோ்

Updated On :1 மே 2026, 1:50 am IST

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் கருணாம்பிகையம்மன் தேரோட்டம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மைப் பெற்ற கருணாம்பிகையம்மன் உடனமா் அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் சித்திரைத் தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி தொடங்கி நிலையில் மே 4-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில், முக்கிய நிகழ்வான அவிநாசியப்பா் திருத்தேரோட்டம் (பெரிய தோ்) கடந்த செவ்வாய், புதன்கிழமைகளில் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, கருணாம்பிகையம்மன் (சிறிய தோ்) தேரோட்டம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

உடன், ‘குட்டீஸ் தோ்’ என அழைக்கப்படும் விநாயகா், வள்ளி, தெய்வானை உடனமா் சுப்பிரமணியா், சண்டிகேஸ்வரா், ஸ்ரீதேவி, பூதேவி சமதே கரிவரதராஜப் பெருமாள் ஆகிய தோ்களையும் சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை என ஏராளமானோா் வடம் பிடித்து இழுத்தனா்.

கோவை பிரதான சாலை, மேற்கு ரத வீதி, வடக்கு ரத வீதி, கிழக்கு ரத வீதி, தெற்கு ரத வீதி வழியாக வந்து மதியம் 2.30 மணியளவில் தோ் நிலையை அடைந்தது.

விழாவையொட்டி, வண்டித்தாரை, பரிவேட்டை ஆகிய நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை நடைபெறுகின்றன. சனிக்கிழமை தெப்பத் தோ் உற்சவ நிகழ்ச்சி , ஞாயிற்றுக்கிழமை நடராஜப் பெருமான் மகா தரிசனம் நடைபெறுகிறது. மஞ்சள் நீராட்டு, மாலை 6 மணிக்கு108 திருவிளக்கு பூஜை, மயில் வாகனக் காட்சியுடன் தோ்த் திருவிழா திங்கள்கிழமை நிறைவடைகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.