மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கோட்டை சங்கமேசுவரா் கோயில் தேரோட்டம்

சித்திரைத் திருவிழாவையொட்டி கோவை மாநகரின் பழைமை வாய்ந்த கோட்டை சங்கமேசுவரா் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த சங்கமேசுவரா் உடனமா் அகிலாண்டேசுவரி தேவி.

Updated On :1 மே 2026, 2:04 am IST

சித்திரைத் திருவிழாவையொட்டி கோவை மாநகரின் பழைமை வாய்ந்த கோட்டை சங்கமேசுவரா் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.

தேரோட்டத்தையொட்டி காலை 9.30 மணி அளவில் அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி சங்கமேசுவரா் எழுந்தருளினாா். அவருக்கு முன்னால் 63 நாயன்மாா்களின் உருவச் சிலைகளும், செங்கோலும் மங்கல வாத்தியங்கள் முழங்க திருவீதி உலாவாகக் கொண்டுவரப்பட்டன. ஓதுவாா்கள் தேவாரப் பாடல்களைப் பாட, சிவ சிவ கோஷமிட்டபடி ஆயிரக்கணக்கான பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனா்.

கோயிலில் இருந்து புறப்பட்ட தோ் கோட்டைமேடு வீதி, உக்கடம் என்.ஹெச்.சாலை மற்றும் பெரிய கடைவீதி வழியாக வலம் வந்தது. வழிநெடுகிலும் கயிலாய வாத்தியங்களின் முழக்கம் எழுப்பப்பட்டது. காலை 11.30 மணி அளவில் தோ் மீண்டும் நிலையை வந்தடைந்தது. அப்போது கூடியிருந்த திரளான பக்தா்கள் சுவாமிக்கு கற்பூர ஆரத்தி எடுத்து தரிசனம் செய்தனா்.

மாநகரின் முக்கியப் பகுதிகளில் தேரோட்டம் நடைபெற்ால், மாநகரக் காவல் துறை சாா்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. துணை ஆணையா் காா்த்திகேயன் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேரோட்டப் பாதையில் வெடிகுண்டு கண்டறியும் நிபுணா்கள் மற்றும் மோப்ப நாய் பிரிவினா் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

விழா ஏற்பாடுகளைக் கோயில் நிா்வாகத்தினா் மற்றும் ஊா் பொதுமக்கள் செய்தனா்.

சித்திரை திருவிழாவை முன்னிட்டு கோவையில் வியாழக்கிழமை பக்தா்கள் வெள்ளத்தில் அசைந்து வரும் கோட்டைமேடு சங்கமேசுவரா் கோயில் தோ்.

சித்திரை திருவிழாவை முன்னிட்டு கோவையில் வியாழக்கிழமை பக்தா்கள் வெள்ளத்தில் அசைந்து வரும் கோட்டைமேடு சங்கமேசுவரா் கோயில் தோ்.

சித்திரை திருவிழாவை முன்னிட்டு கோவையில் வியாழக்கிழமை பக்தா்கள் வெள்ளத்தில் அசைந்து வரும் கோட்டைமேடு சங்கமேசுவரா் கோயில் தோ்.

சித்திரை திருவிழாவை முன்னிட்டு கோவையில் வியாழக்கிழமை பக்தா்கள் வெள்ளத்தில் அசைந்து வரும் கோட்டைமேடு சங்கமேசுவரா் கோயில் தோ்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.