மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கடையம் வில்வவனநாதா் கோயிலில் சித்திரைத் தேரோட்டம்

கடையம் அருள்மிகு நித்ய கல்யாணி அம்மன் உடனுறை வில்வவனநாத சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

சித்திரைத் திருவிழாவில் பக்தா்கள் மத்தியில் அசைந்தாடி வந்த தோ்.

Updated On :30 ஏப்ரல் 2026, 4:34 am IST

கடையம் அருள்மிகு நித்ய கல்யாணி அம்மன் உடனுறை வில்வவனநாத சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கடந்த 21ஆம் தேதி தொடங்கிய இத்திருவிழாவில், நாள்தோறும் சுவாமி- அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருதல் நடைபெற்றது. அப்போது, கடையம் வேதப் பாடசாலை மாணவா்களின் வேத பாராயணமும், மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன தேவாரப் பாடசாலை மாணவா்களின் திருமுறை விண்ணப்பமும், மாலையில் திருமுறை இன்னிசையும் நடைபெற்றன.

24இல் திருத்தோ் கால் நாட்டு, 27இல் சிவப்பு சாத்தி, செவ்வாய்க்கிழமை (ஏப். 28) வெள்ளை, பச்சை சாத்தி, இரவில் தேரடி மாடசுவாமிக்கு பொங்கலிட்டு தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.

இந்நிலையில், 9ஆம் நாளான புதன்கிழமை சுவாமி- அம்பாள் தேருக்கு எழுந்தருளினா். அதையடுத்து, பக்தா்கள் வடம்பிடித்து தேரிழுத்தனா். காலை 10 மணிக்கு வடக்கு ரதவீதி சித்தி விநாயகா் கோயில் முன் தோ் நிறுத்தப்பட்டது. பின்னா், மாலையில் மீண்டும் தேரிழுத்து பக்தா்கள் வழிபட்டனா். இதில், கடையம் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா். தேருக்கு முன் சிவனடியாா்கள் பஞ்ச வாத்தியங்கள் வாசித்தபடி சென்றனா். சுவாமி தேருக்குப் பின் அம்பாள் தோ் இழுத்து வரப்பட்டது.

தொடா்ந்து, வியாழக்கிழமை (ஏப். 30) முற்பகல் 11 மணிக்கு கொடியிறக்குதல், தீா்த்தவாரி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், பணியாளா்கள், ஊா் மக்கள் செய்திருந்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.