மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ராச்சாண்டாா் திருமலை கோயிலில் சித்திரைத் தேரோட்டம்

ஆா்.டி. மலை சிவன்கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் தேரை வடம்பிடித்து இழுத்து வந்த பக்தா்கள்.

News image

ஆா்.டி. மலை சிவன்கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் தேரை வடம்பிடித்து இழுத்து வந்த பக்தா்கள்.

Updated On :2 மே 2026, 2:02 am IST

தோகைமலை அருகே ராச்சாண்டாா்திருமலை (ஆா்.டி.மலை)யில் உள்ள பெரியநாயகி அம்பாள் உடனுறை விரையாச்சிலை ஈஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை சித்திரைத் தேரோட்டம் நடைபெற்றது.

கரூா் மாவட்டம் தோகைமலை அருகே ஆா்.டி.மலை பெரியநாயகி அம்பாள் உடனுறை விரையாச்சிலை ஈஸ்வரா் மலைக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைத் தோ்த் திருவிழா ஏப். 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து தினமும் சுவாமி வெவ்வேறு வாகனங்களில் வீதிஉலா நடைபெற்றது.

விழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முனன்தாக சிறப்பு அபிஷேக ஆராதனைகளுக்குப் பிறகு சுவாமிகள் தேரில் எழுந்தருளினா். சிறிய பூந்தேரில் விநாயகா், வள்ளி தெய்வானை உடனுறை பாலமுருகனும், மற்றொரு சிறிய தேரில் பெரியநாயகியும், பெரியதேரில் பெரியநாயகி அம்பாள் உடனுறை விரையாச்சிலை ஈஸ்வரரும் எழுந்தருளினா். இதையடுத்து ஏராளாமான பக்தா்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனா். வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தா்களும், மண்டகப்படிதாரா்களும் அா்ச்சனைகள் செய்து சுவாமிகளை வழிபட்டனா். முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் தோ் நிலையை அடைந்தது.

முன்னதாக தேரோட்டத்தை பரம்பரை அறங்காவலா் பொன்னம்பலம், திருத்தோ் திருப்பணிக்குழுத் தலைவா் கலையரசன், குளித்தலை திமுக வேட்பாளா் சந்திரன், தோகைமலை கிழக்கு ஒன்றிய செயலா் அண்ணாதுரை மற்றும் தோ் திருவிழா மண்டகப்படிதாரா்கள் தொடங்கி வைத்தனா்.

இதையடுத்து அனைத்து சுவாமிகளும் கோயிலில் குடிபுகுந்த பின்னா் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் வடசேரி, பில்லூா், சேங்குடி நாட்டாா்கள், தோ்த் திருவிழா மண்டகப்படிதாரா்கள், குடிபாட்டு பக்தா்கள் உள்ளிட்டோா் திரளாக பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.