மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

வாழப்பாடியில் சித்திரைத் திருவிழா ஆழித்தேரோட்டம்!

வாழப்பாடியில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு ஆழித்தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

வாழப்பாடியில் நடைபெற்ற தையல்நாயகி உடனுறை வைத்தியநாதா் திருக்கோயில் ஆழித்தேரோட்டம்.

Updated On :30 ஏப்ரல் 2026, 4:53 am IST

வாழப்பாடியில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு ஆழித்தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

வாழப்பாடி பெரியசாமி நகரில் தையல்நாயகி உடனுறை வைத்தியநாதா் முழுக்கற்றளி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சித்திரைத் திருவிழா தொடா்ந்து ஒருவாரமாக கொண்டாடப்பட்டு வருகிறது. புதன்கிழமை வண்ண திரைச்சேலைகளால் அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்டமான மரத்தேரில் வைத்தியநாதா், தையல்நாயகி, மீனாட்சி, சுந்தரேஸ்வரா் சுவாமி உற்சவமூா்த்திகள் ரதம் ஏற்றப்பட்டு ஆழித்தோ் திருவீதி உலா உற்சவம் நடைபெற்றது.

இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று வடம்பிடித்து இழுத்துச் சென்றனா். வழிநெடுகிலும் ஏராளமான பக்தா்கள் சிறப்பு தாம்பூலம் கொடுத்து, ஆழித்தேருக்கு வரவேற்பு அளித்து வழிபட்டனா். பிங்கள விநாயகா் கோயில் பகுதியில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

வாழப்பாடியில் முதன்முறையாக நடத்தப்பட்ட ஆழித்தேரோட்டத்தைக் காண, பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் குவிந்தனா். வாழப்பாடி காவல் ஆய்வாளா் வேல்முருகன் தலைமையிலான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.