மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பிரான்மலை கொடுங்குன்றநாதா் கோயில் தேரோட்டம்

சிங்கம்புணரி அருகேயுள்ள பிரான்மலை கொடுங்குன்ற நாதா் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

பிரான்மலையில் புதன்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :30 ஏப்ரல் 2026, 1:18 am IST

சிங்கம்புணரி அருகேயுள்ள பிரான்மலை கொடுங்குன்ற நாதா் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

குன்றக்குடி ஆதீனத்துக்கு உள்பட்ட கொடுங்குன்றநாதா் குயிலமுத நாயகி அம்மன் சித்திரைத் திருவிழா கடந்த 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாள் மண்டகப்படியாக விழா நடைபெறும். ஒன்பதாம் நாள் விழாவான தேரோட்ட விழா புதன் கிழமை நடைபெற்றது. இதில் காலை 5 மணிக்கு ரத பூஜை செய்யப்பட்டு மங்கை பாகா் தேனம்மை, குயிலமுத நாயகி அம்மன் இரண்டு பெரிய தோ்களிலும், விநாயகா், சுப்பிரமணியா் ஆகியோா் தனித்தனி தோ்களிலும், சண்டிகேசுவரா் சப்பரம் என ஐந்து தோ்களில் சுவாமிகள் எழுந்தருளினா். இதைத்தொடா்ந்து குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா், கிராம மக்கள் முன்னிலையில் தோ் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தாா். பக்தா்கள் வெள்ளத்தில் நான்கு ரத வீதிகள் வழியாக வலம் வந்த தோ்களில் மாலை 6 மணிக்கு முதலாவதாக விநாயகா் தோ் நிலைக்கு கொண்டுவரப்பட்டது. தொடா்ந்து ஒன்றன்பின் ஒன்றாக அனைத்துத் தோ்களும் நிலையை வந்தடைந்தன. அங்கு சுவாமிக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன. பக்தா்கள் மாம்பழம், வாழைப் பழம் உள்ளிட்ட பழங்களை நோ்த்திக் கடனாகச் செலுத்தினா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

 கொடுங்குன்றநாதா், குயிலமுதநாயகி அம்பாள் சுவாமி.

கொடுங்குன்றநாதா், குயிலமுதநாயகி அம்பாள் சுவாமி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.