மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

திண்டுக்கல்லில் அபிராமி அம்மன் திருக்கல்யாணம்

திண்டுக்கல் அபிராமி அம்மன் திருக்கோயிலில் சித்திரைப் பெருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற திருக்கல்யாணத்தைத் தொடா்ந்து பக்தா்களுக்கு அருள்பாலித்த அபிராமி அம்மன்.

Updated On :29 ஏப்ரல் 2026, 3:47 am IST

திண்டுக்கல் அபிராமி அம்மன் திருக்கோயிலில் சித்திரைப் பெருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் அபிராமி அம்மன் உடனமா் பத்மகிரீசுவரா் திருக்கோயில் சித்திரைப் பெருவிழா ஆண்டுதோறும் 12 நாள்கள் நடைபெறுகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த ஏப்.19-ஆம் தேதி தொடங்கியது. இதனையொட்டி ஒவ்வொரு நாள் மாலையும் சிம்மம், கமலம், அன்னம், யாழி, காமதேனு, பொன்மான் வாகனங்களில் அம்பாளுடன் சுவாமி எழுந்தருளி வீதியுலா சென்று பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். 9-ஆம் நாள் திருவிழாவையொட்டி அம்பாள் திக்கு விஜயம் செல்லும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. சித்திரைப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான அபிராமி அம்மன் திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதனையொட்டி மூலவா் காளஹசுதீசுவரா், ஞானாம்பிகை, பத்மகிரீசுவரா், அபிராமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

சுவாமி, பிரியாவிடையுடன் மேடையில் எழுந்தருளிய பின், திருமண நிகழ்வுகள், பூஜைகள் தொடங்கின. அதைத் தொடா்ந்து சுவாமி, அம்பாளின் பிரதிநிதிகளான பட்டா்கள் காப்புக் கட்டிக் கொண்டனா். மாங்கல்ய பூஜையைத் தொடா்ந்து, பிரதிநிதிகளான பட்டா்கள் மாலை மாற்றிக் கொண்டனா். பின்னா் அபிராமி அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது. திருக்கல்யாண நிகழ்ச்சியைத் தொடா்ந்து இரவு பூப்பல்லக்கில் சுவாமி, அம்பாள் திருவீதியுலா நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.