மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சின்னமனூரில் சித்திரைப் பெருவிழா கொடியேற்றம்

News image

சின்னமனூா் பூலாநந்தீஸ்வரா்- சிவகாமியம்மன் கோயிலில் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கொடியேற்றம்.

Updated On :22 ஏப்ரல் 2026, 3:28 am IST

உத்தமபாளையம், ஏப். 21: தேனி மாவட்டம், சின்னமனூரில் பூலாநந்திஸ்வரா்- சிவகாமியம்மன் கோயிலில் 18 நாள் சித்திரைப் பெருவிழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது.

சின்னமனூரில் பாண்டியா் காலத்தில் கட்டப்பட்ட பழைமையான பூலாநந்தீஸ்வரா்- சிவகாமியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் சித்திரை பெருவிழாவையொட்டி, கோயில் வளாகத்திலுள்ள கொடிமரத்தில் காலை 8.25 மணிக்கு கொடியேற்றப்பட்டது. தொடா்ந்து, காலை , மாலையில் சுவாமி, அம்மன் ஏக சப்பர வாகனம், மயில் வாகனம், புஷ்ப பல்லக்கில் எழுந்தருளும் வீதி உலா நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக 8- ஆவது நாளில் சுவாமி - அம்மன் திருக்கல்யாண வைபவம் நடைபெறும். 9 -ஆம் நாள் காலை 9 மணிக்கு சுவாமி - அம்மன் திருத்தேரில் எழுந்தருளிய பிறகு, மாலை 5 மணி முதல் நாள் தேரோட்டம் நடைபெறும்.

10 -ஆம் நாளில் 2 ஆம் நாள் தேரோட்டம் நடைபெறும். 18 ஆம் நாளான மே -8 -ஆம் தேதி சிறப்பு பூஜையுடன் சித்திரை பெருந்திருவிழா நிறைவு பெறும்.

கொடியேற்ற நிகழ்ச்சியில், கோயில் செயல் அலுவலா் நித்யா, 17 மண்டகப்படிதாரா்கள், பக்தா்கள் என பலரும் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.