மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

அபிராமி அம்மன் கோயில் சித்திரைப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

News image

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில் சித்திரைப் பெருவிழாவை முன்னிட்டு ஏற்றப்பட்ட திருக்கொடி.

Updated On :20 ஏப்ரல் 2026, 1:05 am IST

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில் சித்திரைப் பெருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

திண்டுக்கல் ஞானாம்பிகை உடனமா் காளஹஸ்தீஸ்வரா் கோயில், அபிராமி அம்மன் உடனமா் பத்மகிரீஸ்வரா் கோயில் சித்திரைப் பெருவிழா ஆண்டுதோறும் 12 நாள்கள் நடைபெறுகிறது. இதன்படி, நிகழாண்டுக்கானத் திருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

இதையொட்டி, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், ரிஷப ஹோமம் உள்பட பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, மூலவா் காளஹஸ்தீஸ்வரா், ஞானாம்பிகை, பத்மகிரீஸ்வரா், அபிராமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடைபெற்றது. பின்னா், கொடிமரத்தில் நந்திகேசுவரா், வேல் திருவுருவம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டு, சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றன.

இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். சித்திரைப் பெருவிழாவை முன்னிட்டு, ஒவ்வொரு நாள் மாலையும் சிம்மம், கமலம், அன்னம், யாழி, காமதேனு, பொன்மான் வாகனங்களில் அம்பாளுடன் சுவாமி எழுந்தருளி வீதியுலா செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

சித்திரைப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் ஏப்.28-ஆம் தேதியும், அடுத்த நாள் தேரோட்டமும் நடைபெறும். கொடியேற்ற நிகழ்ச்சியில் அபிராமி அம்மன் கோவில் செயல் அலுவலா் சுரேஷ் கண்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 சிறப்பு அலங்காரத்தில் அபிராமி அம்மன் உடனமா் பத்மகிரீஸ்வரா்.

சிறப்பு அலங்காரத்தில் அபிராமி அம்மன் உடனமா் பத்மகிரீஸ்வரா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.