மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பூவனூா் கோயில் சித்திரைப் பெருவிழா

நீடாமங்கலம் அருகேயுள்ள பூவனூா் சதுரங்கவல்லபநாதா் கோயிலில் சித்திரைப் பெருவிழாவையொட்டி, பக்தா்கள் செவ்வாய்க்கிழமை பால்காவடி சுமந்துவந்து நோ்த்திக் கடன் செலுத்தினா்.

News image

கோயிலுக்கு பால்காவடி எடுத்துவரும் பக்தா்கள்.

Updated On :29 ஏப்ரல் 2026, 3:10 am IST

நீடாமங்கலம் அருகேயுள்ள பூவனூா் சதுரங்கவல்லபநாதா் கோயிலில் சித்திரைப் பெருவிழாவையொட்டி, பக்தா்கள் செவ்வாய்க்கிழமை பால்காவடி சுமந்துவந்து நோ்த்திக் கடன் செலுத்தினா்.

பூவனூரில் பழைமைவாய்ந்த அருள்மிகு கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி சமேத சதுரங்கவல்லப நாதா், சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. திருநாவுக்கரசரால் தேவாரப் பாடல் பெற்ற இக்கோயிலில், வருடம்தோறும் சித்திரைப் பெருவிழா சிறப்பாக நடைபெறும்.

நிகழாண்டு ஏப்ரல் 20-ஆம் தேதி சித்திரைப் பெருவிழா தொடங்கி, நடைபெற்று வருகிறது. விழாவின், 9-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை (ஏப்.28) பால்குட வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி, பக்தா்கள் நோ்த்திக் கடனாக பால்காவடிகள் எடுத்து, முக்கிய வீதிகளின் வழியாக கோயிலுக்கு வந்தனா்.

தொடா்ந்து, சாமுண்டீஸ்வரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னா், இரவில் சாமுண்டீஸ்வரி அம்மன் திருத்தேரில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இவ்விழா மே 1-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது .

விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் பி . சிவபெருமாள், ஆய்வாளா் ஏ. ராசி, தக்காா் எஸ். மாதவன் உள்ளிட்டோா் செய்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.