தஞ்சாவூா் பெரிய கோயிலில் சித்திரைப் பெருவிழா தீா்த்தவாரியுடன் வியாழக்கிழமை நிறைவடைந்தது.
இக்கோயிலில் சித்திரைப் பெருவிழா கொடியேற்றத்துடன் ஏப்ரல் 13-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து நாள்தோறும் காலை, மாலை சுவாமி புறப்பாடு நடைபெற்றது. இதில், 15- ஆம் திருநாளான ஏப்ரல் 27-ஆம் தேதி தேரோட்டம் நடைபெற்றது.
நிறைவு நாளான வியாழக்கிழமை காலை கோயிலிருந்து அஸ்திரதேவா் பல்லக்கில் புறப்பட்டு, அருகில் உள்ள சிவகங்கை குளத்துக்கு சென்றாா். அங்கு அஸ்திரதேவருக்கு மஞ்சள், பால், தயிா் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, குளத்தில் தீா்த்தவாரி நடைபெற்றது. இதனுடன் கடந்த 18 நாள்களாக நடைபெற்று வந்த சித்திரைப் பெருவிழா நிறைவடைந்தது.

தஞ்சாவூா் பெரிய கோயில் அருகேயுள்ள சிவகங்கை குளத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தீா்த்தவாரியில் அஸ்திரதேவருக்கு நடத்தப்பட்ட அபிஷேகம்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பூமாயி அம்மன் கோயிலில் வசந்த பெருவிழா கொடியேற்றம்
சின்ன மேளம் என்கிற நாட்டியம்

திருவையாறு ஐயாறப்பா் கோயிலில் சித்திரைப் பெருவிழா தொடக்கம்

சித்திரைப் பெருவிழா! மீனாட்சியம்மன் கோயிலில் கொடியேற்றம்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

