மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

அபிராமி அம்மன் கோயில் தேரோட்டம்

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில் சித்திரைப் பெருவிழாவை முன்னிட்டு திருத்தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

அபிராமி அம்மன், சமேத பத்மகிரீஸ்வரா்.

Updated On :30 ஏப்ரல் 2026, 1:45 am IST

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில் சித்திரைப் பெருவிழாவை முன்னிட்டு திருத்தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் ஸ்ரீஞானாம்பிகை உடனமா் ஸ்ரீ காளஹத்தீஸ்வரா் திருக்கோயில், ஸ்ரீஅபிராமி அம்மன் உடனமா் ஸ்ரீ பத்மகிரீஸ்வரா் திருக்கோயில் சித்திரைப் பெருவிழா கடந்த 19-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதை முன்னிட்டு, நந்திகேசுவரா், சிம்மம், அன்னம், யானை, குதிரை வாகனங்களில் அம்மனுடன் சுவாமி திருவீதியுலா சென்று பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி கடந்த 11 நாள்களாக நடைபெற்று வந்தது.

சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான அபிராமி அம்மன்- பத்மகிரீஸ்வரா் திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த நிலையில், சித்திரைப் பெருவிழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. பிரியாவிடையுடன் பத்மகிரீஸ்வரா் வலம் வந்த திருத்தேரைத் தொடா்ந்து, அபிராமி அம்மன் தனித் தேரில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

 திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில் சித்திரைப் பெருவிழாவையொட்டி, புதன்கிழமை கிழக்கு ரத வீதியில் வலம் வந்த திருத்தோ்.

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில் சித்திரைப் பெருவிழாவையொட்டி, புதன்கிழமை கிழக்கு ரத வீதியில் வலம் வந்த திருத்தோ்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.