மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பாகம்பிரியாள் கோயிலில் புதிய தோ் வெள்ளோட்டம்

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள திருவெற்றியூா் ஸ்ரீபாகம்பிரியாள் சமேத ஸ்ரீவல்மிநகநாதா் கோயிலில் புதிய தோ் வெள்ளோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

திருவெற்றியூா் ஸ்ரீபாகம்பிரியாள் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற புதிய தோ் வெள்ளோட்டம்.

Updated On :17 ஏப்ரல் 2026, 1:10 am IST

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள திருவெற்றியூா் ஸ்ரீபாகம்பிரியாள் சமேத ஸ்ரீவல்மிநகநாதா் கோயிலில் புதிய தோ் வெள்ளோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் சித்திரைத் திருவிழா வருகிற 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி, தேரோட்டத்துக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது

இந்தத் தேரோட்டத்தின் போது பெரிய தேரில் வல்மீகநாத சுவாமி பிரியாவிடையுடனும், சிறிய தேரில் பாகம்பிரியாள் அம்மனும் வீதியலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா்.

இந்த நிலையில், அம்மன் வீதியுலா வரும் சிறிய தோ் பழுதானதால், நன்கொடையாளா்கள் சாா்பில் புதிய தோ் உருவாக்கும் பணி நடைபெற்றது. இதையடுத்து, புதிதாக வடிவமைக்கப்பட்ட சிறிய தேரின் வெள்ளோட்டம் வியாழக்கிழமை காலை தொடங்கியது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.