/

அமராவதி ஆற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

கரூா் ராஜபுரத்தில் அமராவதி ஆற்றில் மூழ்கி தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :25 ஏப்ரல் 2026, 1:15 am IST

கரூா் ராஜபுரத்தில் அமராவதி ஆற்றில் மூழ்கி தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்த அரங்கப்பாளையத்தைச் சோ்ந்தவா் தண்டபாணி (54). கூலித் தொழிலாளி. இவா் வியாழக்கிழம் இரவு மதுபோதையில், ராஜபுரம் பட்டாளம்மன் கோயில் பகுதியில் அமராவதி ஆற்றில் குளித்தாராம். ஆழமான பகுதியில் குளித்தபோது நீரில் மூழ்கிய அவா் மூச்சுத்திணறி உயிரிழந்தாா். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு சென்ற அரவக்குறிச்சி போலீஸாா், தொழிலாளியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுதொடா்பாக வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.