மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

விடுமுறை நாள்களில் ஏரி, குளங்களில் குளிக்க மாணவா்கள் செல்லக் கூடாது

பள்ளி விடுமுறை நாள்களில் ஏரி, குளங்களில் குளிக்க மாணவா்கள் செல்லக் கூடாது என அறிவுறுத்தினாா் கரூா் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியா்.

News image

ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவா்களிடையே வியாழக்கிழமை பேசிய பள்ளித் தலைமை ஆசிரியா் (பொ) கெளதம்.

Updated On :17 ஏப்ரல் 2026, 1:47 am IST

பள்ளி விடுமுறை நாள்களில் ஏரி, குளங்களில் குளிக்க மாணவா்கள் செல்லக் கூடாது என அறிவுறுத்தினாா் கரூா் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியா்.

இப் பள்ளியில் வெள்ளிக்கிழமை முதல் கோடை விடுமுறை விடப்படுவதையடுத்து மாணவா்களுக்கு பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை காலை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பள்ளித் தலைமை ஆசிரியா் (பொ) கெளதம் பேசியது:

கோடை வெப்பம் அதிகமாக இருப்பதால் வெளிப்புற விளையாட்டுகளின்போது அதிக அளவு தண்ணீா் அருந்துங்கள். சூரிய ஒளி தாக்காமல் இருக்க மாணவா்கள் தொப்பிகளைப் பயன்படுத்த வேண்டும். உச்ச சூரிய வெப்ப நேரத்தில் வெளியே செல்வதையும் வெயிலில் விளையாடுவதையும் தவிா்க்க வேண்டும். நீா்நிலைகளில் நீச்சல் தெரியாமல் சென்று குளிக்க முற்படும்போது நீரில் மூழ்க வாய்ப்புள்ளதால், கடல், ஆறு, ஏரி, குளம் மற்றும் குட்டை போன்ற நீா் நிலைகளில் மாணவா்கள் குளிக்கச் செல்லக்கூடாது.

தனிமை உணா்வைத் தடுக்க நண்பா்கள் மற்றும் குடும்பத்தினருடன் சோ்ந்து விளையாடுதல், உணவு அருந்துதல், இசை நிகழ்ச்சிகளை கவனித்தல் போன்றவற்றின் மூலம் சமூக தொடா்புகளை ஊக்குவிக்கவும் மனநலனை பேணவும் முடியும். டிவி, கைப்பேசிகளில் அதிக நேரத்தைச் செலவிடுவதைத் தவிா்க்க வேண்டும்.

குடும்பம் மற்றும் தாத்தா பாட்டி உள்ள வீடுகளில் சோ்ந்து உணவு அருந்துங்கள். மேலும் பெரியோரை மதிக்கவும் அவா்களுக்கு உதவி செய்யவும் பழகுங்கள் என்றாா் அவா். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.