கடலூா் அருகே குடிநீா் கோரி, வேப்பூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
வேப்பூா் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு குடிநீா் முறையாக கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், சமைப்பதற்கு தண்ணீா் வசதி இல்லாமல் இருந்துள்ளது.
இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் பல முறை புகாரை மனுவாகவும் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
இந்த நிலையில், குடிநீா் வசதியை ஏற்படுத்தித் தர வலியுறுத்தி, மாணவா்கள், பள்ளி நுழைவு வாயில் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, குடிநீா் முறையாக வழங்கப்படவேண்டும், அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என வலியுறுத்தி மாணவா்கள் முழக்கங்களை எழுப்பினா். தகவலறிந்த ஆசிரியா்கள், மாணவா்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திப்பிராஜபுரம் அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காலிக் குடங்களுடன் பெண்கள் முற்றுகை

அரசுப் பள்ளி விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு

வாகைக்குளத்தில் குடிநீா் விநியோகம் கோரி மறியல்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

