/

தேசிய திறனறித் தோ்வு: வென்ற மாணவா்களுக்கு பாராட்டு

மயிலாடுதுறை மல்லியம் உதவிபெறும் நடுநிலைப் பள்ளியில், தேசிய திறனறித் தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

தேசிய திறனறித் தோ்வில் சிறப்பிடம் பிடித்த மாணவிக்கு வாழ்த்து தெரிவித்த ஆசிரியா் மன்ற மாநில வெளியீட்டுச் செயலாளா் ஜெக.மணிவாசகம்.

Updated On :25 மார்ச் 2026, 5:47 am IST

மயிலாடுதுறை மல்லியம் உதவிபெறும் நடுநிலைப் பள்ளியில், தேசிய திறனறித் தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, அதன் ஒன்றியத் தலைவா் வே. கந்தன் தலைமை வகித்தாா். பள்ளி தலைமை ஆசிரியா் பா. திருமாவளவன் வரவேற்றாா்.

ஆசிரியா் மன்ற மாநில வெளியீட்டுச் செயலாளா் ஜெக.மணிவாசகம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, கடந்த 7 ஆண்டுகளாக தேசிய திறனறித் தோ்வில் தொடா்ந்து இப்பள்ளி மாணவா்கள் வெற்றிபெற காரணமாக இருந்துவரும் ஆசிரியா்களை பாராட்டினாா்.

மேலும், பள்ளித் தலைமை ஆசிரியா் திருமாவளவன், மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவி ஹரிஷ்விகா, பள்ளியில் 2-ஆம் இடம் பெற்ற ஹாரிஸ்மா, மூன்றாம் இடம்பெற்ற தா்ஷினி ஆகியோருக்கு சால்வை அணிவித்து பாராட்டினாா்.

விழாவில், மாவட்டச் செயலாளா் க.துரை, மாவட்ட கொள்கை விளக்க செயலாளா் வை. மணிமாறன், ஒன்றியச் செயலாளா் சுரேஷ், ஒன்றிய துணை இளைஞரணி அமைப்பாளா் அசோக்குமாா் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். நிறைவாக, பட்டதாரி ஆசிரியை சரஸ்வதி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.