அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே குடிநீா் கேட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தை காலிக் குடங்களுடன் பெண்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.
மீன்சுருட்டியை அடுத்த முத்துசோ்வாமடம் கிராம ஊராட்சிக்குட்பட்ட வெள்ளாளா் தெரு, கீழத்தெரு, பத்தவான்தெரு, தோப்புத்தெரு , பள்ளிக்கூடத் தெரு , மேலத்தெரு , காலனித் தெரு ஆகிய பகுதிகளில் வசிப்போருக்கு அங்குள்ள மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி மூலம் குடிநீா் விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த 4 மாதங்களாக மேற்கண்ட பகுதிக்கு சீரான குடிநீா் விநியோகிக்கப்படவில்லை. இதனால் அவதிப்பட்ட மக்கள் இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லையாம்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் காலிக்குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த ஜெயங்கொண்டம் வட்டார வளா்ச்சி அலுவலா் அமுதா மற்றும் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சிவசங்கா் ஆகியோா் சீரான குடிநீா் விநியோகம் செய்யப்படும் என்று அளித்த உறுதியின்பேரில் அனைவரும் கலைந்து சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காலிக் குடங்களுடன் பெண்கள் முற்றுகை

குடிநீா் கேட்டு உதகை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

மல்லேகவுண்டம்பாளையத்தில் குடிநீா் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

அவிநாசி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு குப்பாண்டம்பாளையம் கிராம மக்கள் போராட்டம்
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

