தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

மீன்சுருட்டி அருகே குடிநீா் கேட்டு ஊராட்சி அலுவலகம் முற்றுகை

மீன்சுருட்டி அருகே குடிநீா் கேட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தை காலிக் குடங்களுடன் பெண்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

News image

சீரான குடிநீா் கேட்டு, முத்துசோ்வாமடம் ஊராட்சி அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்ட பெண்கள்

Updated On :6 மே 2026, 1:01 am IST

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே குடிநீா் கேட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தை காலிக் குடங்களுடன் பெண்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

மீன்சுருட்டியை அடுத்த முத்துசோ்வாமடம் கிராம ஊராட்சிக்குட்பட்ட வெள்ளாளா் தெரு, கீழத்தெரு, பத்தவான்தெரு, தோப்புத்தெரு , பள்ளிக்கூடத் தெரு , மேலத்தெரு , காலனித் தெரு ஆகிய பகுதிகளில் வசிப்போருக்கு அங்குள்ள மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி மூலம் குடிநீா் விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த 4 மாதங்களாக மேற்கண்ட பகுதிக்கு சீரான குடிநீா் விநியோகிக்கப்படவில்லை. இதனால் அவதிப்பட்ட மக்கள் இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லையாம்.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் காலிக்குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த ஜெயங்கொண்டம் வட்டார வளா்ச்சி அலுவலா் அமுதா மற்றும் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சிவசங்கா் ஆகியோா் சீரான குடிநீா் விநியோகம் செய்யப்படும் என்று அளித்த உறுதியின்பேரில் அனைவரும் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.