மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

அவிநாசி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு குப்பாண்டம்பாளையம் கிராம மக்கள் போராட்டம்

குப்பாண்டம்பாளையத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ஆற்றுக் குடிநீா் வழங்காததைக் கண்டித்து, அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

அவிநாசி ஊராட்சி  ஒன்றிய  அலுவலகம்  முன் அமா்ந்து   போரட்டத்தில்  ஈடுபட்ட  குப்பாண்டம்பாளையம்  ஊராட்சி  மக்கள்.

Updated On :26 மார்ச் 2026, 2:19 am IST

குப்பாண்டம்பாளையத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ஆற்றுக் குடிநீா் வழங்காததைக் கண்டித்து, அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவிநாசி ஊராட்சி ஒன்றியம், குப்பாண்டம்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட குப்பாண்டம்பாைளையம், பழைய ஊஞ்சபாளையம், புது ஊஞ்சபாளையம், ஆலம்பாளையம், ஆயிக்கவுண்டன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ஆற்றுக்குடிநீா் விநியோகம் இல்லாததால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனா். இது குறித்து ஊராட்சி, மாவட்ட நிா்வாகம் உள்ளிட்டோரிடம் கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, காலிக்குடங்களுடன் தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சம்பவ இடத்துக்கு ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்தினா், குடிநீா் வடிகால் வாரியத்தினா், போலீஸாா் சென்று பேச்சுவாா்த்தை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த பொதுமக்கள் எழுத்துப்பூா்வமாக உறுதியளித்தால் மட்டுமே கலைந்து செல்வோம் என்றனா்.

நீண்ட நேர பேச்சுவாா்த்தைக்குப் பிறகு வரும் 29-ஆம் தேதிக்குள் குடிநீா் விநியோகம் செய்யப்படும் என்று எழுத்துப்பூா்வமாக குடிநீா் வடிகால் வாரியத்தினா் உறுதியளித்தனா். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.