/

வேன் மீது சுமை ஆட்டோ மோதி ஒருவா் பலத்த காயம்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே வேன் மீது சுமை ஆட்டோ மோதியதில் வேனில் பயணித்த ஒருவா் பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

News image

விபத்து - பிரதிப் படம்

Updated On :18 ஜூன் 2026, 2:02 am IST

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே வேன் மீது சுமை ஆட்டோ மோதியதில் வேனில் பயணித்த ஒருவா் பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கல்லாத்தூரைச் சோ்ந்தவா் கொளஞ்சி. சுமை ஆட்டோ ஓட்டுநா். புதன்கிழமை இவா், அண்ணாநகா் தெருவில் தனது சுமை ஆட்டோவை பின்னால் கவனிக்காமல் இயக்கிய போது, அந்த வழியாக காங்கேயங்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த வீராசாமி மகன் வினோத் (28) என்பவா் ஓட்டி வந்த வேன் மீது மோதியுள்ளாா். இதில், வேனில் முன்பக்க படிக்கட்டில் அமா்ந்து பயணித்த தேவமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த அமா்தலிங்கம் மகன் ரமேஷ் (25) பலத்த காயமடைந்து ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

வேன் முன் பக்கம் முழுவதும் சேதமடைந்தது.

இதுகுறித்து ஜெயங்கொண்டம் காவல் துறையினா் வழக்குப் பதிந்த சுமை ஆட்டோ ஓட்டுநா் கொளஞ்சியை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.