திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த ரூ. 8 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை இருப்புப்பாதை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.
சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு திருச்சி இருப்புப்பாதை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் சாம் ஆலன் தலைமையிலான போலீஸாா், திருச்சி போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீஸாருடன் இணைந்து திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வந்த புருளியா - திருநெல்வேலி விரைவு ரயிலில் (22605) சோதனையிட்டனா்.
அப்போது வண்டியின் பொதுப்பெட்டி மற்றும் நடைமேடையில் கேட்பாரற்றுக் கிடந்த 3 பைகளை (ஷோல்டா் பேக்) அவா்கள் சோதனையிட்டபோது, அதில் சுமாா் ரூ. 8 லட்சம் மதிப்பிலான 16.645 கிலோ எடையுள்ள (தலா 2 கிலோவில் 8 பாக்கெட்டுகள்) கஞ்சா இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவற்றை இருப்புப்பாதை போலீஸாா் பறிமுதல் செய்து, சட்ட நடவடிக்கைக்காக போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இதையடுத்து போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் கஞ்சாவை எடுத்து வந்தது யாா் என்பது குறித்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரயிலில் கஞ்சா கடத்தி வந்த இளைஞா் கைது

ஈரோடு ரயில் நிலையத்தில் 80 கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல்

ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த ரூ.16 லட்சம் கஞ்சா பறிமுதல்

அஸ்ஸாமில் இருந்து வந்த ரயிலில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

