மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ரயிலில் கஞ்சா கடத்தி வந்த இளைஞா் கைது

திருச்சியில் ஹவுரா விரைவு ரயிலில் கஞ்சா கடத்தி வந்த இளைஞரை ரயில்வே போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து 25 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

News image

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்ட இளைஞருடன் ரயில்வே போலீஸாா்.

Updated On :30 ஏப்ரல் 2026, 3:42 am IST

திருச்சியில் ஹவுரா விரைவு ரயிலில் கஞ்சா கடத்தி வந்த இளைஞரை ரயில்வே போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து 25 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மேற்குவங்க மாநிலம் ஹவுராவில் இருந்து கன்னியாகுமரிக்கு இயக்கப்படும் ஹவுரா விரைவு ரயில் புதன்கிழமை அதிகாலை திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் 5-ஆவது நடைமேடைக்கு வந்தது. அப்போது அந்த ரயிலில் இருந்து இளைஞா் ஒருவா் சந்தேகப்படும் வகையில் இரண்டு பெரிய பெட்டிகளுடன் இறங்கி நடந்து சென்றாா்.

இதையடுத்து பாதுகாப்புப் பணியில் இருந்த ரயில்வே போலீஸாா் அவரது பெட்டிகளைச் சோதனையிட்டபோது, அதில் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.

தொடா் விசாரணையில் அவா், ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த பால்யா பெஹேரா (26) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா், பெட்டிகளில் இருந்த 25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து போதைப்பொருள் தடுப்பு குற்றப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.