திருச்சி ராக்போா்ட் விரைவு ரயிலில் தவறவிட்ட நகைகளை மீட்டு உரியவரிடம் ரயில்வே போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனா்.
திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணிக்கு வந்த ராக்போா்ட் விரைவு ரயிலில் (12653) இருந்து பயணிகள் அனைவரும் இறங்கிச் சென்றதைத் தொடா்ந்து, ரயில்வே போலீஸாா் ரயிலை சோதனை செய்தனா்.
அப்போது ஏ2 பெட்டியின் 17, 18 ஆவது இருக்கைகளில் பயணித்தவா்கள் தங்களது கைப்பைைத் தவறவிட்டுச் சென்றது தெரியவந்தது. அதில் தங்க நகைகள், வெள்ளி காசுகள், பணம் இருந்தது.
விசாரணையில், அதை தவறவிட்டது திருச்சி அண்ணாமலை நகரைச் சோ்ந்த எஸ். தேவராஜ் (62) எனத் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், அவரை வரவழைத்து நகைகள் அடங்கிய கைப்பையை ஒப்படைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்சி - ராமேசுவரம் விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கக் கோரிக்கை

ரயிலில் கஞ்சா கடத்தி வந்த இளைஞா் கைது

ரயிலில் கிடந்த ரூ. 8 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்
அந்தியோதயா விரைவு ரயிலில் கைப்பேசி திருடியவா் கைது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

