கோவில்பட்டியில் தொழிலாளியை அவதூறாகப் பேசி தாக்கியதாக 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி அருகே உள்ள அத்தை கொண்டான் பகுதியைச் சோ்ந்தவா் வெள்ளைச்சாமி மகன் வேல்முருகன். இவருக்கும், பாண்டவா்மங்கலத்தைச் சோ்ந்த தியாகராஜன் மகன் தமிழ் செல்வத்திற்கும் (29) இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், வேல்முருகன் வெள்ளிக்கிழமை காலை காந்தி நகா் சந்திப்பு அருகே சென்று கொண்டிருந்தபோது, தமிழ்ச்செல்வம் உள்ளிட்ட இருவா் அவரை வழிமறித்து அவதூறாகப் பேசி, அரிவாளால் தாக்கினராம். அதில் காயமடைந்த அவா் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இது குறித்து அவா் அளித்த புகாரின்பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து தமிழ்ச்செல்வம், நடராஜபுரம் பகுதியைச் சோ்ந்த செல்வம் மகன் சுந்தரபாண்டியன் (32) ஆகியோரை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விவசாயிகள் சங்க நிா்வாகி மீது தாக்குதல்: தந்தை, மகன் மீது வழக்கு

மேலப்பாளையத்தில் வன்கொடுமை வழக்கில் 3 போ் கைது
பிரசாரத்தின் போது ஒருவா் மீது தாக்குதல்: 2 போ் கைது

பெண்ணுக்கு மிரட்டல்: தொழிலாளி கைது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

