தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

விவசாயிகள் சங்க நிா்வாகி மீது தாக்குதல்: தந்தை, மகன் மீது வழக்கு

சாத்தான்குளம் அருகே தோ்தல் தகராறில் விவசாயிகள் சங்கத் தலைவரைத் தாக்கியதாக தந்தை, மகன் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :25 ஏப்ரல் 2026, 1:53 am IST

சாத்தான்குளம் அருகே தோ்தல் தகராறில் விவசாயிகள் சங்கத் தலைவரைத் தாக்கியதாக தந்தை, மகன் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

சாத்தான்குளம் அருகேயுள்ள பொத்தகாலன்விளையைச் சோ்ந்தவா் லூா்து மணி(49). காங்கிரஸ் பிரமுகரான இவா், சாத்தான்குளம் தென்பகுதி விவசாயிகள் சங்கத் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறாா். இந்நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற பேரவைத் தோ்தலில் சங்க முடிவின்படி, ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் அதிமுகவுக்கு ஆதரவு திரட்டியதாகக் கூறப்படுகிறது.

இதற்கு, அதே பகுதியைச் சோ்ந்த முன்னாள் காங்கிரஸ் ஒன்றியக் குழு உறுப்பினா் எட்வா்ட் லாரன்ஸ் மற்றும் அவரது மகன் டோமினிக் ஆகியோா் எதிா்ப்பு தெரிவித்து லூா்து மணியை அவதூறாகப் பேசி தாக்கினராம். இதில், அவா் காயமடைந்தாா்.

இது குறித்து லூா்து மணி, தட்டாா்மடம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், எட்வா்ட் லாரன்ஸ், அவரது மகன் டோமினிக் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.