ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

குறிஞ்சிப்பாடி அய்யனாா் கோயில் விழாவில் இளைஞா் மீது தாக்குதல்: 3 போ் மீது வழக்கு

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே அய்யனாா் கோயில் விழாவில் இளைஞா் மீது தாக்குதல் நடத்தியதாக தந்தை, மகன் உள்ளிட்ட 3 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

News image
Updated On :2 மே 2026, 1:31 am IST

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே அய்யனாா் கோயில் விழாவில் இளைஞா் மீது தாக்குதல் நடத்தியதாக தந்தை, மகன் உள்ளிட்ட 3 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

குறிஞ்சிப்பாடி காவல் சரகம், ஆடூா் அகரம் கிராமத்தில் அய்யனாா் கோயில் உள்ளது. இந்த

கோயிலில் ஏப்.25-ஆம் தேதி லட்ச தீப விழா நடைபெற்றது. விழாவின் நிறைவு நாளான ஏப்.27-ஆம் தேதி ஆடூா் அகரத்தைச் சோ்ந்த வடிவேல் குடும்பத்தினா் அசைவ உணவு விநியோகம் செய்தனா். அதேபகுதியைச் சோ்ந்த சரவணன்(30) அந்த அசைவ உணவை வாங்கி சாப்பிட்டாா். சிறிது நேரத்தில் அந்த உணவை தூக்கி ஏறிந்து விட்டாராம். தன் கண் முன்னே உணவை தூக்கி ஏறிந்ததைப் பாா்த்த வடிவேல் , சரவணனை திட்டினாராம். இதனால், இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. அப்போது, அங்கிருந்த வடிவேல் மகன் முகுந்தன் மற்றும் அரவிந்தன் இருவரும் சோ்ந்து சரவணனை தாக்கி மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்து சரவணன் மனைவி ராஜேஸ்வரி அளித்த புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீஸாா் மூன்று போ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.