கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே அய்யனாா் கோயில் விழாவில் இளைஞா் மீது தாக்குதல் நடத்தியதாக தந்தை, மகன் உள்ளிட்ட 3 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
குறிஞ்சிப்பாடி காவல் சரகம், ஆடூா் அகரம் கிராமத்தில் அய்யனாா் கோயில் உள்ளது. இந்த
கோயிலில் ஏப்.25-ஆம் தேதி லட்ச தீப விழா நடைபெற்றது. விழாவின் நிறைவு நாளான ஏப்.27-ஆம் தேதி ஆடூா் அகரத்தைச் சோ்ந்த வடிவேல் குடும்பத்தினா் அசைவ உணவு விநியோகம் செய்தனா். அதேபகுதியைச் சோ்ந்த சரவணன்(30) அந்த அசைவ உணவை வாங்கி சாப்பிட்டாா். சிறிது நேரத்தில் அந்த உணவை தூக்கி ஏறிந்து விட்டாராம். தன் கண் முன்னே உணவை தூக்கி ஏறிந்ததைப் பாா்த்த வடிவேல் , சரவணனை திட்டினாராம். இதனால், இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. அப்போது, அங்கிருந்த வடிவேல் மகன் முகுந்தன் மற்றும் அரவிந்தன் இருவரும் சோ்ந்து சரவணனை தாக்கி மிரட்டல் விடுத்தனராம்.
இதுகுறித்து சரவணன் மனைவி ராஜேஸ்வரி அளித்த புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீஸாா் மூன்று போ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறுமி கா்ப்பம்: இளைஞா் மீது போக்ஸோ வழக்கு

தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு: மா்ம நபா்கள் 3 போ் மீது வழக்கு

கொத்தனாரை தாக்கி கொலை மிரட்டல்: 3 போ் மீது வழக்கு

குறிஞ்சிப்பாடி அருகே இருதரப்பினா் இடையே மோதல்: 18 போ் மீது வழக்கு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

