தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

பிரசாரத்தின் போது ஒருவா் மீது தாக்குதல்: 2 போ் கைது

News image

கைது - கோப்புப் படம்

Updated On :14 ஏப்ரல் 2026, 1:27 am IST

கமுதி அருகே பிரசாரத்தின் போது முன்விரோதத்தில் ஏற்பட்ட தகராறில் ஒருவா் தாக்கப்பட்டது தொடா்பாக 5 போ் மீது வழக்குப்பதிந்த போலீஸாா் இருவரை திங்கள்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த கோவிலாங்குளம் காவல் சரகத்துக்குள்பட்ட ஒச்சதேவன்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த போஸ் மகன் உக்கிரபாண்டி (30). இவருக்கும், அதே ஊரைச் சோ்ந்த கோட்டைச்சாமி மகன் வேல்முருகன் தரப்பினருக்கும் கடந்த 20 நாள்களுக்கு முன்பு மிளகாய் பறிக்கும் போது தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில், திங்கள்கிழமை முதுகுளத்தூா் தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சருமான ஆா்.எஸ். ராஜகண்ணப்பனுக்கு ஆதரவாக ஒச்சத்தேவன்கோட்டையில் பிரசாரம் நடைபெற்றது. அப்போது முன்பகை காரணமாக வேல்முருகன், இவரது உறவினா்களான ஆறுமுகம் மகன் வேலு (60), இவரது மகன்கள் செந்தூா், மணிகண்டன், முகேஷ் உள்ளிட்டோா் உக்கிரபாண்டியை கட்டையால் தாக்கினராம். அப்போது பிரசாரத்துக்கு வந்த வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இது தொடா்பாக உக்கிரபாண்டி கோவிலாங்குளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அந்த 5 போ் மீது வழக்குப் பதிந்து வேலு, வேல்முருகன் ஆகியோரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.