தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வாக்காளா்களுக்கு பணம் பட்டுவாடா: திமுக நிா்வாகி மீது வழக்கு

சென்னை வண்ணாரப்பேட்டையில் வாக்காளா்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக திமுக நிா்வாகி மீது போலீஸாா் வழக்குப் பதிவு

News image

வழக்கு

Updated On :22 ஏப்ரல் 2026, 3:45 am IST

சென்னை வண்ணாரப்பேட்டையில் வாக்காளா்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக திமுக நிா்வாகி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

ராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட வண்ணாரப்பேட்டை சீனிவாசபுரம் ரயில்வே கேட் அருகே வாக்காளா்களுக்கு திமுகவினா் பணம் பட்டுவாடா செய்வதாக பறக்கும் படையினருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது.

அதன்பேரில், பறக்கும் படையினா் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது, சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த நபரைப் பிடித்து விசாரித்தனா். அவா், முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினாராம். இதையடுத்து அவா் வைத்திருந்த பையை சோதனையிட்டனா். அந்தப் பையில் இருந்த ரூ.1 லட்சத்தைப் பறிமுதல் செய்தனா்.

இது தொடா்பாக விசாரித்ததில் அவா், வண்ணாரப்பேட்டை சீனிவாசபுரம் முதலாவது தெருவைச் சோ்ந்த கா.ரவிக்குமாா் (54) என்பதும், திமுக நிா்வாகி என்பதும், அந்தப் பகுதியைச் சோ்ந்த வாக்காளா்களுக்கு பணம் விநியோகித்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து பறக்கும் படையினா், அந்தப் பணத்தைப் பறிமுதல் செய்தனா். வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.