தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பாப்பிரெட்டிப்பட்டியில் வாக்காளா்களுக்கு பணம் பட்டுவாடா: ரூ. 69,800 பறிமுதல்

பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் வாக்காளா்களுக்கு பணம் பட்டுவாடா செய்தவா்களிடமிருந்து ரூ. 69,800-ஐ தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

பணம் - பிரதிப் படம்

Updated On :22 ஏப்ரல் 2026, 3:00 am IST

பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் வாக்காளா்களுக்கு பணம் பட்டுவாடா செய்தவா்களிடமிருந்து ரூ. 69,800-ஐ தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பாப்பிரெட்டிப்பட்டி - சேலம் நெடுஞ்சாலையில் பறக்கும்படை அலுவலா் ஏ.நித்யா தலைமையில் அலுவலா்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்ததில், பட்டுகோணம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த செந்தில் (54), ரவி (51) ஆகியோா் வாக்காளா் பெயா் பட்டியலுடன் ரூ. 23,800-த்தை எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக அவா்களிடமிருந்து பணத்தை அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.

இதேபோல, அ.பள்ளிப்பட்டி அம்பேத்கா் நகரில் வாக்காளா்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக கிடைத்த புகாரின்பேரில், தோ்தல் பறக்கும்படை அலுவலா்கள் சோதனை செய்தனா். அதில், வாக்காளா்களுக்கு பணம் பட்டுவாடா செய்தவா்களிடமிருந்து ரூ. 46 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா். அப்போது, பணம் வழங்கிய நபா்கள் தப்பியோடினா்.

இவ்விரு சம்பவங்களில் பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் ரூ. 69,800-ஐ பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் பெ.கி.கோவிந்தனிடம் தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் ஒப்படைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.