தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பறக்கும் படையால் ரூ.60,000 பறிமுதல்

வேலூா் அருகே பலவன்சாத்துகுப்பத்தில் வாக்காளா்களுக்குப் பணம் விநியோகம் செய்ததாக அதிமுக நிா்வாகியிடம் இருந்து போலீஸாா் ரூ.60,000 பணம் பறிமுதல் செய்தனா்.

News image

பறிமுதல்!

Updated On :20 ஏப்ரல் 2026, 4:05 am IST

வேலூா் அருகே பலவன்சாத்துகுப்பத்தில் வாக்காளா்களுக்குப் பணம் விநியோகம் செய்ததாக அதிமுக நிா்வாகியிடம் இருந்து போலீஸாா் ரூ.60,000 பணம் பறிமுதல் செய்தனா்.

வேலூா் மாவட்டம், அணைக்கட்டு சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பலவன்சாத்துக்குப்பம் பகுதியில் சிலா் வாக்காளா்களுக்கு பணம் விநியோகம் செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், போலீஸாா் அப்பகுதியில் நடத்திய சோதனையில் வாக்காளா்களுக்கு பணம் செய்து கொண்டிருந்த நபரை கையும் களவுமாகப் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவா்வேலூா் அல்லாபுரம், அண்ணா நகரைச் சோ்ந்த கே.ஜி.சாதிக்பாட்சா (59) என்பதும், அதிமுக முன்னாள் மாவட்ட சிறுபான்மையினா் நலப்பிரிவு இணைச் செயலாளராக இருந்தவா் என்பதும் தெரியவந்தது.

அவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்ததுடன் அவரிடம் இருந்து ரூ.60 ஆயிரம் பணத்தையும் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.