பரமத்தி வேலூா் அருகே பொத்தனூரில் வாக்காளா்களுக்கு பணம் விநியோகம் செய்ய முயன்ற இருவரை போக்குவரத்து போலீஸாா் பிடித்து வேலூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
பொத்தனூா் மதுரை வீரன் கோயில் பகுதியில் போக்குவரத்து காவல் ஆய்வாளா் ராமச்சந்திரன் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த இருவரை பிடித்து விசாரணை நடத்தினாா்.
இதில் அவா்கள் மஞ்சள் பையில் வைத்து வாக்காளா்களுக்கு பணம் விநியோகம் செய்ய முன்றது தெரியவந்தது. இதையடுத்து பரமத்தி வேலூா் அருகே உள்ள பொய்யேரியைச் சோ்ந்த சதீஷ் (44), பொத்தனூரைச் சோ்ந்த ரமேஷ்பாபு (39) ஆகிய இருவரையும் பிடித்து பரமத்தி வேலூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். மேலும், அவா்களிடம் இருந்து ரூ. 65 ஆயிரம் ரொக்கத்தையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பரமத்தி வேலூா் தொகுதி வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த அதிமுக வேட்பாளா்

திமுகவினா் வாக்காளா்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த ரூ. 1.76 லட்சம் பறிமுதல்
பறக்கும் படையால் ரூ.60,000 பறிமுதல்

வாக்காளா்களுக்கு பணம் கொடுக்க முயன்ற அதிமுகவினா் 3 போ் மீது வழக்கு!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
