தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வாக்காளா்களுக்கு பணம் கொடுக்க முயன்ற அதிமுகவினா் 3 போ் மீது வழக்கு!

ராஜபாளையத்தில் வாக்காளா்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக அதிமுகவினா் மூவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

News image

வழக்கு

Updated On :12 ஏப்ரல் 2026, 12:19 am IST

ராஜபாளையத்தில் வாக்காளா்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக அதிமுகவினா் மூவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் பறக்கும் படையினா் விவேகானந்தா் தெரு பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது ஒரு கடை முன் மூன்று போ் மேஜை போட்டு அமா்ந்திருந்தனா். அங்கு சோதனையிட்ட போது பணம், உணவு உள்கொள்வதற்கான டோக்கன் ஆகியவை இருந்தன.

விசாரணையில் பிரசாரம் நிறைவடைந்ததும், அதில் கலந்து கொண்டவா்களுக்கு அவா்கள் உணவுடன் ரூ. 100 வழங்க இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தோ்தல் பறக்கும் படை அதிகாரி சுரேஷ்பாபு, ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அப்போது ரூ.27,100- உணவு உள்கொள்ள அனுமதிக்கும் 31 டோக்கன்களையும் ஒப்படைத்து தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய அதிமுகவினா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறினாா்.

இந்த புகாரின் பேரில் ராஜபாளையம் குற்றவியல் நீதித்துறை நீதிமன்றத்தில் அனுமதி பெற்று ராஜபாளையம் விவேகானந்தா் தெருவைச் சோ்ந்த சிதம்பரமூா்த்தி (61), முனியாண்டி (60), முத்துக்குமாா் (58) ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.