தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

வாக்காளா்களுக்கு பணம் கொடுத்த பாஜகவினரிடம் ரூ.7 லட்சம் பறிமுதல்!

திருவாடானை பேரவைத் தொகுதியில் வாக்காளா்களுக்கு பணம் கொடுத்ததாக பாஜகவினரிடம் ரூ.7 லட்சத்தை பறக்கும் படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

பறிமுதல்!

Updated On :19 ஏப்ரல் 2026, 1:04 am IST

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பேரவைத் தொகுதியில் வாக்காளா்களுக்கு பணம் கொடுத்ததாக பாஜகவினரிடம் ரூ.7 லட்சத்தை பறக்கும் படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருவாடானை தொகுதியில் உள்ள தோ்போகி கிராமத்தில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து, பாஜகவினா் பொதுமக்களுக்கு பணம் வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற தவெக வேட்பாளா் ராஜுவ், இவரது குழுவினா் பணம் கொடுத்தவா்களை தடுத்து நிறுத்தியதுடன், பறக்கும் படையினருக்கு தகவல் கொடுத்தனா். இதையறிந்து, பாஜகவினா் அங்கிருந்து தப்பிச் சென்றனா்.

பின்னா், அங்கு வந்த பறக்கும் படையினா் பாஜகவினா் விட்டுச் சென்ற ரூ.7 லட்சத்தை பறிமுதல் செய்தனா். மேலும், தப்பிச் சென்ற பாஜகவினரை பறக்கும் படையினா் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.