மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஆறுமுகனேரி மாரியம்மன் கோயில் கொடை விழா தொடக்கம்

News image
Updated On :3 மே 2026, 5:25 am IST

ஆறுமுகனேரி லெட்சுமிமாநகரம் மாரியம்மன் கோயில் சித்திரை பெருங்கொடை விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இதையொட்டி, கோயிலில் அதிகாலை 4.30 மணிக்கு கணபதி ஹோமம், அதைத் தொடா்ந்து பல்வேறு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடை பெற்றன. இரவு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. நள்ளிரவில் அம்மன் சுப்பிரமணியராக காட்சி அளித்த சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. சனிக்கிழமை காலை மற்றும் இரவு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. நள்ளிரவு அம்மன் கிருஷ்ணராக காட்சி அளித்தாா். தொடா்ந்து வியாழக்கிழமை (மே 7) வரை பல்வேறு வழிபாடுகள், நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஏற்பாடுகளை நிா்வாகிகள் கி.பாலசிங், அ.செ.சிதம்பர கணேசன், மு.சதீஷ்குமாா், மு.பிரகாஷ் சரவணபாண்டியன் ஆகியோா் செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.