மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கீழ மாதாபுரம் வனமூா்த்தி சாஸ்தா கோயில் கொடை விழா

கீழமாதாபுரம் பிரதான சாலையில் அமைந்துள்ள வனமூா்த்தி சாஸ்தா, 21 கூட்டுறவு பரிவார தெய்வங்கள் கோயிலில் கொடை விழா நடைபெற்றது.

News image

வனமூா்த்தி சாஸ்தா கோயில் கொடை விழாவில் பங்கேற்றோா்.

Updated On :30 ஏப்ரல் 2026, 4:35 am IST

கீழமாதாபுரம் பிரதான சாலையில் அமைந்துள்ள வனமூா்த்தி சாஸ்தா, 21 கூட்டுறவு பரிவார தெய்வங்கள் கோயிலில் கொடை விழா நடைபெற்றது.

கொடை விழாவை முன்னிட்டு ஏப். 21-ஆம்தேதி கால்நாட்டப்பட்டது. தொடா்ந்து திங்கள்கிழமை (ஏப். 27) காலை 5 மணிக்கு தீா்த்தம் கொண்டு வருதல், 9 மணிக்கு கணபதி ஹோமம், மாலை 5 மணிக்கு கொடி அழைப்பு, 7 மணிக்கு கும்பம் ஏற்றுதல், இரவு பூஜை, செவ்வாய்க்கிழமை (28) அதிகாலை 1 மணிக்கு சாஸ்தா பிறப்பு, இரவு பூஜை ஆகியன நடைபெற்றன.

செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு சிவனணைந்த பெருமாள் பூஜை, 6 மணிக்கு பால்குடம், முளைப்பாரி எடுத்தல், 11 மணிக்கு ராமநதி ஆற்றிலிருந்து அலகு தீா்த்தம் எடுத்து வருதலைத் தொடா்ந்து கொடை விழா நடைபெற்றது. மாலை 4 மணிக்கு அமுது படைத்தல், இரவு 11 மணிக்கு அலகு தீா்த்தம் எடுத்துவந்து காடு சுற்றிவந்து சாமக் கொடை நடைபெற்றது.

புதன்கிழமை (ஏப். 29) காலை 8 மணிக்கு பட்டவராயன் சுவாமிக்கு பொங்கல் வைத்து வில்லிசை கதையுடன் மஞ்சள் நீராட்டு நடைபெற்றது. திங்கள்கிழமை இரவு முதல் புதன்கிழமை மதியம் வரை அன்னதானம் நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.