மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கந்தபுரம் கோயில் கும்பாபிஷேகம்

உடன்குடி அருகே உள்ள கந்தபுரம், பெருமாள் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

ஸ்ரீதேவி, பூதேவி அம்பாள்களுடன் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் சுவாமி.

Updated On :26 மார்ச் 2026, 4:19 am IST

உடன்குடி அருகே உள்ள கந்தபுரம், பெருமாள் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் கும்பாபிஷேக விழா மாா்ச் 23ஆம் தேதி கோ பூஜையுடன் தொடங்கியது. விழா நாள்களில், இறை ஆணை பெறுதல், முதல் நிலை வேள்விகள், நவக்கிரக வேள்வி, சந்திர பூஜை, புதிய சிலைகளுக்கு அகக்கண் திறத்தல், வாஸ்து பூஜை, திருவிளக்கு வழிபாடு, சங்கல்பம், தீா்த்த வழிபாடு, திருக்குடங்கள் நிறுவல், முத்தமிழால் நாரணா்க்கு முதல்கால வேள்வி, பெரும் பேரொளி வழிபாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

புதன்கிழமை காலை 7 மணிக்கு கருவிக்குட வேள்வி, அருள் ஊட்டம், தத்துவ வழிபாடு, 8 மணிக்கு 2ஆம் கால வேள்வி, 9 மணிக்கு மேல் பெருமாள் சுவாமி, பரிவார தெய்வங்கள், விமானங்களுக்கு மங்கல நீராட்டு விழா நடைபெற்றது.

தொடா்ந்து, அலங்கார தீபாராதனை, வழிபாடுகள், அன்னதானம் ஆகியவை நடைபெற்றன. இரவு 7 மணிக்கு பெருமாள் சுவாமி-ஸ்ரீதேவி, பூதேவி அம்பாள் திருக்கல்யாணம் நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.