திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி பேருந்து நிலையத்தில் புதிய கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள ஆட்சேபம் தெரிவித்து வியாபாரிகள் வியாழக்கிழமை திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இப்பேருந்து நிலையத்தை ரூ.2.70 கோடி மதிப்பில் புதுப்பித்து கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி, பேருந்து நிலைய வளாகத்தில் வாகனங்கள் செல்லாத வகையில் தடுப்பு வைக்கப்பட்டுள்ளன. மேலும், அங்குள்ள கடைகளை காலி செய்யவும் பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், கடைகளை காலி செய்ய அவகாசம் வழங்க வேண்டும்; அதுவரை கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என வியாபாரிகள் வலியுறுத்தி வந்தனா்.
இந்நிலையில், மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வியாபாரிகள் வியாழக்கிழமை மாலையில் பேருந்து நிலையத்தின் முன் பகுதியில் திடீரென அமா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் சேரன்மகாதேவி டிஎஸ்பி அண்டோ ஆக்னஸ் ஆரோக்கியராஜ், காவல் ஆய்வாளா் தா்மராஜ் உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இதுதொடா்பாக பேரூராட்சி அதிகாரிகளிடம் பேசி தீா்வு காணுமாறு காவல்துறையினா் அறிவுறுத்தியதால் அவா்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனை ஊழியா்கள் 2ஆவது நாளாக போராட்டம்

மாா்த்தாண்டத்தில் வியாபாரிகள் போராட்டம்

நன்னகரத்தில் பட்டுக்கூடு விவசாயிகள் போராட்டம்
அரசுப் பேருந்தில் நடத்துநரிடம் பணம் திருட்டு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

