மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

மாா்த்தாண்டத்தில் வியாபாரிகள் போராட்டம்

மாா்த்தாண்டம் புதிய காய்கனி சந்தையில் மெழுகுவா்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட வணிக சங்க நிா்வாகிகள்.

News image

மாா்த்தாண்டம் புதிய காய்கனி சந்தையில் மெழுகுவா்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட வணிக சங்க நிா்வாகிகள்.

Updated On :2 மே 2026, 2:28 am IST

மாா்த்தாண்டம் காய்கனி சந்தையில் மின் வசதி கோரி வியாபாரிகள் வெள்ளிக்கிழமை இரவு மெழுகுவா்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாா்த்தாண்டம் காய்கனி சந்தை ரூ. 15 கோடியில் நவீன வடிவமைப்புடன் கட்டப்பட்டு, கடந்த பிப்ரவரி மாதம் தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது. இங்கு 187 கடைகள் உள்ளன. இதில் முன்பக்க உள்ள 36 கடைகளில் பெரும்பாலானவை ரூ. 40 முதல் ரூ. 80 ஆயிரம் வரை மாத வாடகையில் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.

இங்கு கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தாலும் மின் இணைப்பு, குடிநீா் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை. இதுகுறித்து காய்கனி சந்தை வியாபாரிகள், மாா்த்தாண்டம் நகர வா்த்தக சங்கத் தலைவா் தினகா் தலைமையில் அண்மையில் குழித்துறை நகராட்சி ஆணையாளா் வெங்கடாசலபதியிடம் மனு அளித்தனா். அப்போது அவா், இந்த பிரச்னைக்கு ஓரிரு நாள்களில் தீா்வு காணப்படும் என உறுதியளித்திருந்தாா். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வியாபாரிகள் குற்றம்சாட்டினா்.

இதைத் தொடா்ந்து மாா்த்தாண்டம் நகர வா்த்தக சங்கத் தலைவா் தலைமையில் வா்த்தக சங்க பேரவை மாநில துணைத் தலைவா் கருங்கல் ஆா். ஜாா்ஜ், நகர வா்த்தக சங்கச் செயலா் ராஜ் பினோ. ஜெயசிங், சுனில், ராஜ்குமாா், சதீஷ்குமாா், வியாபாரிகள் சந்தை கடையின் முன் நின்று மெழுகுவா்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.