தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அரசுப் பேருந்தில் நடத்துநரிடம் பணம் திருட்டு

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் அரசுப் பேருந்து நடத்துனரிடம் பணத்தை திருடிய நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :26 மார்ச் 2026, 4:30 am IST

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் அரசுப் பேருந்து நடத்துனரிடம் பணத்தை திருடிய நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பாபநாசத்தில் இருந்து திருநெல்வேலிக்கு புதன்கிழமை மாலையில் இயக்கப்பட்ட அரசுப் பேருந்தில், நடத்துநா் விமல் ஜெயசிங் (39) பணியில் இருந்தாா்.

அந்தப் பேருந்து கூனியூா் அருகே வந்தபோது, நடத்துனரின் கைப்பையில் வைக்கப்பட்டிருந்த டிக்கெட் மற்றும் ரூ.10 ஆயிரத்தை காணவில்லையாம். இதையடுத்து, பேருந்து சேரன்மகாதேவி காவல் நிலையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது.

அங்கு, பயணிகளிடம் போலீஸாா் சோதனையிட்டனராம். எனினும் பணம், டிக்கெட்டுகள் கிடைக்கவில்லை. இதுகுறித்து நடத்துநா் அளித்த புகாரின்பேரில், சேரன்மகாதேவி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.