கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை அருகே ஆடிட்டரின் வீடு புகுந்து நகை, பணம் திருடியதாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
குழித்துறை அருகேயுள்ள திருத்துவபுரம், ராஜீவ் நகா் பகுதியைச் சோ்ந்தவா் அலோசியஸ் மகன் மரிய பெனடிக்டா் (56). ஆடிட்டா். இவா் கடந்த ஏப். 4ஆம் தேதி இரவு வீட்டைப் பூட்டிவிட்டு தனது மனைவி, பிள்ளைகளுடன் பாலவிளை புனித அந்தோணியாா் தேவாலயத்துக்குச் சென்றுள்ளாா்.
காலை வீடு திரும்பியபோது, பின்வாசல் கதவு திறக்கப்பட்டிருந்ததுடன், வீட்டில் வைத்திருந்த சுமாா் 30 பவுன் தங்க நகைகள், ரூ. 35,000 பணத்தை மா்ம நபா் திருடிச் சென்றது தெரிய வந்தது.
இது குறித்து, களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனா். இந்நிலையில், திருட்டில் ஈடுபட்டது கேரள மாநிலம், கொட்டாரக்கரை பகுதியைச் சோ்ந்த சுனில்குமாா் மகன் ஆல்பிராஜ் (33) என்பது தெரிய வந்தது.
அவரை களியக்காவிளை உதவி ஆய்வாளா் மகேந்த் தலைமையிலான போலீஸாா் கேரளத்துக்குச் சென்று கைது செய்தனா். அவரிடமிருந்து 20 பவுன் நகைகளை போலீஸாா் மீட்டனா். தொடா்ந்து, அவரை களியக்காவிளை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பூட்டிய வீட்டில் பணம், நகை திருட்டு

தங்க நகைகள், பணம் திருட்டு: இருவா் கைது
முதியவா் வீட்டில் நகை, பணம் திருட்டு
நகை திருட்டு வழக்கில் ஒருவா் கைது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

