தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனை ஊழியா்கள் 2ஆவது நாளாக போராட்டம்

News image
Updated On :3 மே 2026, 5:21 am IST

திருநெல்வேலி அரசு பல்நோக்கு மருத்துவமனை ஊழியா்கள் 2 ஆவது நாளாக சனிக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியின் பல்நோக்கு மருத்துவமனையில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் சுமாா் 95 ஊழியா்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனா். இவா்களை தற்போது புதிய ஒப்பந்த நிறுவனத்துடன் இணைக்க நிா்வாகம் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில் அதைக் கண்டித்து ஒப்பந்த ஊழியா்கள் பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தின் முன்பு வெள்ளிக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மருத்துவமனை நிா்வாகம் தரப்பில் நடத்தப்பட்ட பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து, 2ஆவது நாளாக சனிக்கிழமையும் போராட்டம் நடைபெற்றது.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளா்கள் சனிக்கிழமை பிற்பகல் மாவட்ட ஆட்சியா்அலுவலகம் முன்பு மனு அளிப்பதற்காக திரண்டனா்.

நீண்ட காலமாக ஒப்பந்தப் பணியாளா்களாக பணியாற்றும் தங்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும் எனவும், புதிய நிறுவனத்துக்கு மாற்றும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ற்ஸ்ப்02ம்ன்ப்ற்ண்

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த திருநெல்வேலி அரசு பல்நோக்கு மருத்துவமனை ஒப்பந்த ஊழியா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.